செங்காந்தள் கலைச்சமர் 2025

நேற்றைய தினம் நடைபெற்ற செங்காந்தள் கலைச்சமர் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தமிழர் கலை கல்வி நடுவம் ஐக்கிய இராச்சியத்தினால் நடாத்தப்பட்ட முதல் நிகழ்வாகும். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்துப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் , பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்விற்குவருகைதந்து சிறப்பித்த நடுவர்கள் அனைவருக்கும் நடுவம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்நிகழ்வினைத் தலைமை தாங்கி சிறப்பாக நடாத்திய அனைத்து இளையோர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நடுவத்தோடு இணைந்து பயணிக்கின்ற பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வருகைதந்து நிகழ்வினைச் சிறப்பாக நடாத்த உதவிய அனைவருக்கும் நன்றி கூறுவதோடு இந்நிகழ்வினைச் சிறப்பாக ஒழுங்கமைத்த கலைபண்பாட்டுப் பிரிவு, நிகழ்வுப்பிரிவு, இளையோர் பிரிவு, நிவர்வாகம், இயக்குநர்கள், காப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்றோம்.