கறோவில், செப்டம்பர் 14 — தமிழர் கலை கல்வி நடுவத்தின் முதலாவது அமர்வு செப்டம்பர் 14ஆம் தேதி கறோ பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் பல தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளும், இளையோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். Read More….
கறோவில், செப்டம்பர் 14 — தமிழர் கலை கல்வி நடுவத்தின் முதலாவது அமர்வு செப்டம்பர் 14ஆம் தேதி கறோ பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் பல தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளும், இளையோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அமர்வில் யாப்பின் நடைமுறைப்படுத்தல், நூலாக்கம், சமூக வலைத்தளங்களின் பயன்கள், புதிய கல்வியாண்டிற்கான வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கியமான தலைப்புகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
தேசியக் கொடியேற்றத்துடன் துவங்கிய இந்நிகழ்வில், தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழர் கலை கல்வி நடுவம், எதிர்காலத்தில் கல்வி மற்றும் கலை பண்பாட்டுத் துறைகளில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செல்லத் திட்டமிட்டுள்ளது.
















